இறைவர் : பாலைவனநாதர்
இறைவி : தவளவெண்ணகை
பதிகம் : அப்பர் 1
தீர்த்தம் : காவிரி
அளவான
கோயில். தாருகாவனத்து இருடிகள் சிவபெருமான் மீது சினக்கொண்டு, ஒரு புலியை ஏவ, அவர்
அதனை உரித்து, ஆடையாக உடுத்திய தலம். இது முன், பாலைவனமாக இருந்த காரணத்தால்
இப்பெயர் பெற்றது.
மயிலாடுதுறை-
தஞ்சாவூர் பாதையில், குத்தாலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 1½ கி.மீ.
வழியில் நூற்றெட்டு சிவாலயம் என்ற தலம் உண்டு. பயண வசதிகள் நிறைய உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 19