இறைவர் : சந்திரசேகேசுவரர், தேவநாயகர்
இறைவி : கதிர்முலையம்மை, கோட்டேந்து முலையாள்
பதிகம் : சம்பந்தர் 1
சிறிய
கோயில். அரம்பையர்கள் வழிபட்ட தலம். சுவாமிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரப்
பூசை. கூவத்தில் இருந்து அர்ச்சகர் வந்து பூசை செய்துவிட்டுப் போகிறார். கோயிலை
சுற்றி கத்தோலிக்க சமயத்தவர் குடிகள் இருக்கின்றன. இறைவர் தீண்டாத் திருமேனி.
“எனதுரை தனதுரையாக இறைவன் அருளினான்” என்று சம்பந்தர் கூறிப் பாடியுள்ளார்.
அம்பலவாணரும், அம்மையாரும் திருவிழாத் திருமேனிகளாக எழுந்தருளி உள்ளனர்.
இங்கிருந்து கூவம் என்னும் திருவிற்கோலம் என்னும் தலம் 2 கி.மீ.
இரண்டு தலங்களுக்கும் இடையில் பெரிய ஏரி.
சென்னையில்
இருந்து நேர் பேருந்து பயண வசதி உண்டு.
தொண்டைநாடு : 13