இறைவர் : ஆடானைநாதர், ஆதிரத்தினேசுவரர்
இறைவி : அம்பாயிரவல்லி, சிநேகவல்லிநாயகி
பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : வில்வம்
பெரிய
அழகான கோயில். கருங்கல் திருப்பணி. 9 நிலை இராச கோபுரம். வருணகுமாரன், வாருணி
துர்வாச முனிவர் இட்ட சாபத்தால், ஆட்டுத் தலையும், யானை உடலும் கொண்டு பெற்ற
வடிவம், சாபவிமோசனம் அடைந்தமையால், இத்தலம் (திரு + ஆடு + ஆனை) என்ற பெயர்
பெற்றது. நல்ல சிற்ப வேலைபாடுகள் கொண்டுள்ள அழகான மண்டபம் உண்டு.
திருச்சி-இராமநாதபுரம்
நெடுஞ்சாலையில் இருந்து பேருந்தில் செல்ல வேண்டும். பயணத்துக்கு காரைக்குடி,
பரமக்குடி, இராமநாதபுரம், அறந்தாங்கி முதலிய இடங்களில் இருந்து பேருந்துகள் பல
உண்டு.
பாண்டிநாடு : 9