திருஅம்பர் பெருந்திருக்கோயில்

இறைவர் : பிரமபுரிநாதர்
இறைவி : பூங்குழல்நாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : அன்னமாம் பொய்கைப் பிரம தீர்த்தம்

அறுபத்து-மூவருள் ஒருவராகிய சோமாசிமாறர் வாழ்ந்து, முத்தி பெற்ற தலம். ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இங்கிருக்கும் கோயில் பெருங்கோயில் எனப் பெயர் பெற்றது. கட்டுமலை மேலிருக்கிறது. மாடக்கோயில் மூலலிங்கத்தின் பின்புறத்தில் சிவன், பார்வதி திருவுருவங்கள் உள்ளன. கோச்செங்கட்சோழனுக்கு இறைவன், இறைவி தம் மணக்கோலம் காட்டிய திருத்தலம்.

மயிலாடுதுறை-திருவாரூர் மார்க்கம், பூந்தோட்டம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 3 கி.மீ. பயண வசதிகள் தாரளமாக உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 54