திருசக்கரப்பள்ளி

இறைவர் : சக்கரவாகேசுவரர்
இறைவி : தேவநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : காவிரி

அளவான கோயில். இராசகிரி ஐயம்பேட்டை எனப்படுகிறது. திருமால் பூசித்ததாலும், சக்கரவாகப் பறவை பூசித்ததாலும் இப்பெயரைப் பெற்றது. இக்கோயிலை சுற்றி மகமதியர் அதிக அளவில் குடியிருக்கிறார்கள். இந்தக் கோயில் இறைவரும் ஏழூர் சுற்றுதல் உண்டு. எழூர்கள் ஆவன : அரிமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுபதிமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை என்பன. இவை முறையே பிராமி, மகேசுவரி முதலிய சப்தமங்கையர்களால் வழிபடப் பெற்றன.

மயிலாடுதுறை- தஞ்சாவூர் மார்க்கம், ஐயம்பேட்டை இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 1 கி.மீ. கும்பகோணத்துக்கு தெற்கில் 28 13 கி.மீ. ரயில், பேருந்து பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 17