திருப்பழுவூர்

இறைவர் : வடமூலநாதர்
இறைவி : அருந்தவநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : பழுமரம் (ஆல்)
தீர்த்தம் : கொள்ளிடம்

அளவான கோயில். அட்டவீரட்டங்களில் ஒன்று. யானையின் தோலை இறைவர் உரித்த தலம். பரசுராமர் தம் தாயைக் கொன்ற பழி தீர, பூசனை செய்து, பாபவிமோசனம் பெற்ற திருவூர். அவரது திருவுருவம் கோயிலில் உள்ளது. மலையாளத்தைச் சேர்ந்த பிராமணர்கள் பூசிக்கும் ஊர்.

திருச்சி-விருத்தாசலம் மார்க்கம், அரியலூர் நிலையத்தில் இருந்து 11 கி.மீ. திருவையாற்றில் இருந்து 16 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 55