திருஅகத்தியான்பள்ளி

இறைவர் : அகத்தீசுவரர்
இறைவி : பாகம்பிரியாநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : வன்னி
தீர்த்தம் : அக்கினி

கோயில் சிறிது. பழைய கட்டிடம். கருவறை அண்மையில் நகரத்தார் திருப்பணி செய்துள்ளனர். அகத்திய முனிவர் சிவபெருமான்-உமாதேவி திருமணத்துக்கு முன்னரே அவர் ஏவலின்படி தெற்கே (தமிழ் நாட்டுக்கு) வந்து சேர்ந்து விட்டார் ஆதலின், அவர் தவம் செய்து விரும்பியபடி, அவர்களது திருமணக் கோலத்தை நேரில் தரிசித்த தலம். இறைவன்-இறைவியின் திருமணக் கோலம் கருவறையில் இருக்கிறது. அகத்தியர் திருவுருவம் கோயிலினுள் தனிச் சந்நிதியில் எழுந்தருளி உள்ளார். கோயிலுக்கு எதிரில் அக்னி (சமுத்திர) தீர்த்தம் உளது.

வேதாரியத்தில் இருந்து இருப்புப்பாதை வழி 2 கி.மீ. பேருந்து வசதிகளும் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 126