இறைவர் : அகத்தீசுவரர்
இறைவி : பாகம்பிரியாநாயகி
பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : வன்னி
தீர்த்தம் : அக்கினி
கோயில்
சிறிது. பழைய கட்டிடம். கருவறை அண்மையில் நகரத்தார் திருப்பணி செய்துள்ளனர்.
அகத்திய முனிவர் சிவபெருமான்-உமாதேவி திருமணத்துக்கு முன்னரே அவர் ஏவலின்படி
தெற்கே (தமிழ் நாட்டுக்கு) வந்து சேர்ந்து விட்டார் ஆதலின், அவர் தவம் செய்து
விரும்பியபடி, அவர்களது திருமணக் கோலத்தை நேரில் தரிசித்த தலம். இறைவன்-இறைவியின்
திருமணக் கோலம் கருவறையில் இருக்கிறது. அகத்தியர் திருவுருவம் கோயிலினுள் தனிச்
சந்நிதியில் எழுந்தருளி உள்ளார். கோயிலுக்கு எதிரில் அக்னி (சமுத்திர) தீர்த்தம்
உளது.
வேதாரியத்தில்
இருந்து இருப்புப்பாதை வழி 2 கி.மீ.
பேருந்து வசதிகளும் உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 126