திருக்கழிப்பாலை

இறைவர் : பால்வண்ணநாதர், கங்காநாயகன்
இறைவி : தேவநாயகி

பதிகம் : சம்பந்தர் 2 + அப்பர் 5 + சுந்தரர் 1 = ஆக 8
தீர்த்தம் : கொள்ளிடம்

பக்கத்திலே உள்ள திருநெல்வாயில் (சிவபுரி) கோயில் போல, அளவான சிறிய கோயில். இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் ¼ கி.மீ. இத்தலம் முன்னர் கொள்ளிட நதியின் வடகரையில், காரைமேடு என்னும் இடத்தில் இருந்தது. அக்கோயில் கொள்ளிடத்தின் வெள்ளப்பெருக்கால் அழிந்துபோக, எஞ்சியிருந்த திருமேனிகள், கல் முதலியவற்றையும் திருத்தொண்டர்கள் திருநெல்வாயில் தலத்துக்கு கொணர்ந்து, அமைத்து எழுப்பப் பட்டுள்ளது. மூலமூர்த்தி வெண்மையான அழகிய திருமேனி. வன்மீக முனிவர் பூசித்து.

இத்தலம் சிதம்பரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவிலும், சிதம்பரம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது. சிதம்பரம்-அண்ணாமலை பல்கலைக்கழக பேருந்துகளில், அங்குள்ள இராசேந்திரன் சிலை வரை சென்று, பின் சிறிது தூரம் கால் நடையாக செல்ல வேண்டும். இது திருப்தியான பயண வசதி.

சோழநாடு, காவிரி வடகரை : 4