திருநீலக்குடி (மனோக்ஞய நாத சுவாமி கோயில்)

இறைவர் : நீலகண்டேசுரர், நல்ல நாயகேசுரர்
இறைவி : உமையம்மை, அழகம்மை

பதிகம் : அப்பர் 1
தீர்த்தம் : வன்னீலம்
தலமரம் : வில்வம் (5 இதழ் கொண்ட); பலா சிறப்பு

சிறிய கோயில். கோயிலுக்கு முன் திருக்குளம் உண்டு. அம்மன் கோயில்கள் இரண்டு. பக்தாபீஷ்டப்ராதாயநீ சுவாமியை மணக்க தவம் செய்த இடம். அநுமஸ்தநிசனனனி மணம் செய்த இடம். கோயிலில் உள்ள மரங்களின் பழத்தை சுவாமி படையல் பண்ணாது, வெளியே கொண்டு போனால், அவை புழுப்பிடித்து, அழுகிவிடும். நல்லெண்ணெய் அபிடேகம் செய்தால், அதில் பாதி இலிங்கத்தில் சுவறிவிடும். நாவுக்கரசரை சமணர் கல்லினோடு கட்டி, கடலில் இட்டதற்கு, அப்பர் பாடிய “கல்லினோடு என்னை” என்ற அகச்சான்றுப் பதிகம் இங்கு பாடப்பட்டதாகும்.

மயிலாடுதுறை-கும்பகோணம் மார்க்கம், ஆடுதுறை இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 4 கி.மீ உம், திருவிடைமருதூர் நிலையத்தில் இருந்து 8 கி.மீ உம் ஆகும். எல்லா பயண வசதிகளும் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 32