திருஆவடுதுறை

இறைவர் : மாசிலாமணியீசர்
இறைவி : ஒப்பிலா முலையம்மை

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 5 + சுந்தரர் 2 = ஆக 8
தீர்த்தம் : கோமுகி
தலமரம் : அரசு

பெரிய கோயில். மிகப்பெரிய நந்தி. புகழ்மிக்க தி.க.ப. திருவாவடுதுறை ஆதீன மடத்தோடு இணைந்திருக்கிறது. அம்மை பசு வடிவாய் இருந்து பூசை செய்தபடியால் இப்பெயர் உண்டாயிற்று. திருமூல நாயனார், இமயத்தில் இருந்து ஆகாய வழியே அகத்தியரை தரிசிக்க பொதியமலை செல்லும்போது, இங்கு வந்து, அரசின் கீழே யோகத்தில் இருந்து, ஆண்டுக்கு ஒரு பாடலாக, மூவாயிரம் பாடல் கொண்ட திருமந்திரத்தை அருளிச் செய்தவர். அவருக்கு கோயிலின் மேற்குப் பிராகாரத்தில் தனியே சந்நிதி உண்டு. திருவிசைப்பா அருளிச்செய்த திருமாளிகைத்தேவர் வாழ்ந்த தலம். சம்பந்தரின் தந்தையார், தாம் வேள்வி செய்ய பொருள் வேண்டும் என்றபோது, சம்பந்தர் பதிகம் பாடி, இறைவன்பால் பொற்கிழி பெற்றுக் கொடுத்தார்.

மயிலாடுதுறை-தஞ்சாவூர் மார்க்கம், நரசிங்கன்பேட்டை இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 2 கி.மீ. ரயில், பேருந்து பயண வசதிகள் உண்டு. அம்மார்க்கம் மணல்மேடாக செல்லும் பேருந்தில் சென்று, மடத்து வாயிலில் இறங்கலாம்.

சோழநாடு, காவிரி தென்கரை : 36