திருஓணகாந்தன்தளி

இறைவர் : ஒணகாந்தேசுவரர்
இறைவி : காமாட்சியம்மை

பதிகம் : சுந்தரர் 1
தீர்த்தம் : ஓணகாந்தம்

கோயில் சிறிது. ஓணன், காந்தன் என்னும் இரு அசுரர்கள் பூசித்த தலம். காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கு மேற்கில் உள்ள சர்வ தீர்த்தத்தில் இருந்து 2 கி.மீ தூரம். சுந்தரர் “செய்யும் பாலும்” என்ற பதிகம் பாடி, பொன் பெற்ற தலம். இங்கே மூன்று சந்நிதிகள் – ஓணன், காந்தன், சலந்தரன் முதலிய மூவருக்கும் தனித்தனியே உண்டு. மூன்று சந்நிதிகளிலும் மூவரும் பூசித்த மூன்று இலிங்கங்கள் உண்டு.

பயண வசதி உண்டு. காஞ்சிக்கு சென்று, அங்கிருந்து கால் நடையாகச் செல்லலாம்.

தொண்டைநாடு : 3