திருஅரதைப்பெரும்பாழி

இறைவர் : பாதாளேசுவரர்
இறைவி : அலங்காரவல்லி

பதிகம் : சம்பந்தர் 1

அளவான கோயில். இறைவர் சந்நிதிக்கு அருகில் பிலம் ஒன்று மூடப்பட்டிருக்கிறது. திருமால் பன்றி வடிவங் கொண்டு தோண்டினார். அப்போது அப்பன்றியின் கொம்பு ஒன்றை சிவபெருமான் முறித்து தம் மார்பில் அணிந்துகொண்ட தலம்.

பயண வசதி உண்டு. நீடாமங்களம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 6 கி.மீ.

சோழநாடு, காவிரி தென்கரை : 99