திருஅறையணி நல்லூர்

இறைவர் : அறையணிநாதர்
இறைவி : அருள்நாயகி

பதிகம் : சம்பந்தர் 1

பெரிய கோயில். பெரிய கோபுரம். பெண்ணையாற்றின் வடகரையில் குன்றின் மேல் கட்டப்பட்டு, மேற்கு பார்த்தது. கோயில் கட்டப்பட்டுள்ள பெரும்பாறையில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. ஆறு குகைகளும் குன்றில் உண்டு. இவற்றில் பஞ்சபாண்டவரும், திரௌபதையும் இருந்தனர் என்பர். இங்கிருந்து பார்த்தால் திருவண்ணாமலைக் கோபுர தரிசனம் கிடைக்கும்.

விழுப்புரம்-காட்பாடி மார்க்கம், திருக்கோவலூர் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 1 கி.மீ. பயண வசதிகள் மிகையாக உண்டு.

நடுநாடு : 12