திருக்குடவாயில்

இறைவர் : கோணேசுவரர்
இறைவி : பெரியநாயகி

பதிகம் : சம்பந்தர் 2

அளவான மாடக்கோயில். திருணபிந்து என்ற முனிவர் இறைவனை நோக்கி வழிபட, அவர் திருக்குடத்தில் இருந்து வெளிவந்து, முனிவருடைய தொழுநோயை தீர்த்த தலம்.

திருவாரூர்-கும்பகோணம் மார்க்கம், திருவாரூரில் இருந்து 20 கி.மீ தூரம். நீடாமங்கலத்தில் இருந்து 10 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 94