இறைவர் : மதுவனநாதர், நன்னிலம் நயநாதர், பிரகேசுவரர்
இறைவி : மதுவனநாயகி, பிரகேசுவரி
பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : சூல தீர்த்தம்
பெரிய
கோயில். கட்டுமலை மீது மாடக்கோயில். ஏறி-இறங்குவதற்கு 16 படிகள்
உண்டு. கோச்செங்கண்ணான் திருப்பணி. அம்பாள் கோயில் கீழே உள்ளது. இராச கோபுரம்
இல்லை. தேவர்கள், அசுரர்களால் துன்புறுத்தப் பட்டபோது, அவர்கள் இறைவனை தஞ்சம்
அடைந்தனர். அப்போது சிவபெருமான் தேவர்களை தேனீக்கள் ஆக மாற்றி, அசுரர்களிடம்
இருந்து காப்பாற்றினார். ஆகவே இவ்வூர் மதுவனம் என்றும், இறைவர் மதுவனநாதர், இறைவி மதுவனநாயகி
என்றும் பெயர் பெற்றார்கள்.
மயிலாடுதுறை-திருவாரூர்
மார்க்கம், நன்னிலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 5 கி.மீ.
வழியில் 2½ கி.மீ தூரத்தில் திருக்கொண்டீச்சரம் உள்ளது. பயண
வசதிகள் மிகவும் உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 71