இறைவர் : வீரட்டேசுவரர், யோகீஸ்வரர்
இறைவி : ஞானம்பிகை
பதிகம் : அப்பர் 2
அளவான
கோயில். 5 நிலை இராச கோபுரம். திருசூல தீர்த்தம் கோயிலில் எதிரில் உள்ளது. அட்ட
வீரட்டத்தலங்களுள் ஒன்று. காமனை எரித்த தலம். அவனை எரித்ததாகக் கருதப்படும்
இடத்தில், வீபூதி போன்ற பஸ்மம் கட்டிகளாக உண்டு. நீறாக்கி, பூசிக்கொள்வர்.
தீர்க்கவாகு (நீண்டகை) என்னும் முனிவருடைய கைகள் குறுகிய தலம். திருச்சுற்றில்
அவர் திருவுருவம் உண்டு.
மயிலாடுதுறைக்கு
அடுத்த திருநீடூர் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 11 கி.மீ.
திருமணஞ்சேரியில் இருந்து 5 கி.மீ. பயண வசதிகள் இருந்தாலும்
சிறிது கஷ்டம்.
சோழநாடு,
காவிரி வடகரை : 26