இறைவர் : பசுபதீசுவரர், சிட்டகுருநாதர்
இறைவி : பூங்கோதைநாயகி, சிவலோகநாயகி
பதிகம் : சுந்தரர் 1
அழகிய
சிறிய கோயில். மேற்கு பார்த்த சந்நிதி. சிவஞானசித்தியார், இருபா இருபது என்ற சித்தாந்த
சாத்திர நூல்களை இயற்றியவர் ஆகிய அருணந்தி சிவாச்சாரியார் பிறந்து, வீடு பெற்ற
தலம். சுந்தரருக்கு காட்சி கொடுத்த இறைவர் விமானத்தில் காட்சி தருகிறார்.
இவ்வூரில் இறைவன் சுந்தரருக்கு திருவடி சூட்டி, குருவடிவுடன் எழுந்தருளி, அருமறை
உபதேசித்தவர் என்பர். அருணந்தி சிவாச்சாரியார் கோயிலும், சுந்தரரை தடுத்தாண்ட
பெருமான் கோயிலும் பெரிய கோயிலுக்கு வெளியே, குளக்கரையில் உள்ளன.
விழுப்புரம்-கடலூர்
மார்க்கம், துறையூர் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 3 கி.மீ.
பண்ருட்டியில் இருந்து பேருந்துப் பயண வசதி உண்டு.
நடுநாடு : 15