1. பிரதோஷ நடனம் :
திருக்கயிலாய மலையில் தேவர்கள் பார்த்து தருசிக்க அவர்கள் நடுவில் ஆடுவது. இது
ஊழிக்காலம் முடிய உலகத் தோற்றம் உண்டாக ஆடும் சிருஷ்டி நடனம்.
2. ஊர்த்துவ
நடனம்
: பைரவர் அல்லது வீரபத்திரர் மூர்த்தத்தில் நின்று ஆடுவது.
திருவாலங்காட்டில் காளியுடன் ஆடியது. திருத்தில்லையில் கனகசபைக்கு எதிரில் உள்ள
நிருத்த சபையில் ஒரு பெரிய தூணில் காணப்படும் சிற்பம் ஊர்த்துவ நடனத்தை
சித்தரிக்கிறது.
3. ஆனந்த நடனம் :
திருத்தில்லையில் கனகசபையில் நித்தியமாய், நிரந்தரமாய் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த,
அற்புத பஞ்ச கிருத்திய நடனம்.