(1)
சுயம்புலிங்கம் : தானே தோன்றியது. திருவாரூர்,
திருத்தில்லை முதலிய தலங்களில் உள்ள மூலட்டானேசுவரர், திருவொற்றியூரில் உள்ள கடம்பக்கநாதர்
முதலியோர். இவர்களுக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஆவுடையாருக்கே செய்வது.
புனுகுச்சட்டம் சாத்தப் பெறும்.
(2)
காணலிங்கம் : விநாயகர், சுப்பிரமணியர்
முதலிய கணர்களாலே தாபித்து வழிபடப் பெற்றது.
(3)
தைவிகலிங்கம் : விட்டுணு முதலிய
தேவர்களால் தாபிக்கப் பெற்றது.
(4)
ஆரிடலிங்கம் : இருடிகளால்
தாபிக்கப்பட்டது. அசுரர், இராக்கதரால் தாபிக்கப்பட்டதும் அதுவே.
(5) மானுடலிங்கம் : மனிதரால் தாபிக்கப்பட்டது. மானுடலிங்கத்தில் உயர்ந்தது தைவிகலிங்கம்.
அதனின் உயர்ந்தது காணலிங்கம். அதனின் உயர்ந்தது சுயம்புலிங்கம்