சங்கு தீர்த்தம்

திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தை அடுத்து மேற்புறம் உள்ள திருக்குளம். இங்கிருந்துதான், சிவபெருமானின் திருவாக்குப்படி, நமிநந்தி அடிகள், நீர் மொண்டு சென்று, திருவாரூர் அரநெறித் திருக்கோயிலில் எண்ணில் விளக்குகளை விடியும் மட்டும் ஏற்றிப் பேறு பெற்றவர்.