திருஓமாம்புலியூர்

இறைவர் : துயரம்தீர்த்தநாதர்
இறைவி : பூங்கொடி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2
தீர்த்தம் : தீர்த்தம்

அளவான கோயில். மண்ணிப்படிக்கரை ஆற்றிற்கு மேற்குக்கரையில் இருக்கிறது. தக்ஷிணாமூர்த்தி பெரிய அளவில், மகாமண்டபத்தில், வடக்குப் புறத்தில், தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். தக்ஷிணாமூர்த்தியிடம் அம்மையார் பிரவண மறை கேட்டருளிய தலம். புலிக்கு அஞ்சிய வேடன் ஒருவன், ஒரு குளத்தங்கரையில் உள்ள மரத்தில் ஏறி, இரவு முழுவதும் கண் விழித்திருப்பதற்காக, அம்மரத்தில் இருந்து இலைகளை ஒவ்வொன்றாக கீழே போட்டு வந்தான். அடுத்த நாள் காலையில் பார்க்கும்போது, மரம் வில்வ மரமாகவும், அதன் கீழே இருந்தது சிவலிங்கம் ஆகவும், அவன் பறித்துப் போட்ட வில்வத்தளிர்கள் சிவலிங்கத்தில் வீழ்ந்ததாகவும், அன்று இரவு முழுவதும் அவனுக்கு வேட்டை (Incomplete).

சோழநாடு, காவிரி வடகரை : 31