திருமீயச்சூர் இளங்கோயில்

இறைவர் : சகலபுவனேசுவரர்
இறைவி : மின்னுமேகலாம்பாள்

பதிகம் : அப்பர் 1

கோயில் சிறிது. இளங்கோயில் என்பது பாலாலயம். திருக்கோயில்களிலே பெருமளவில் திருப்பணி செய்யப்படும் போது, முக்கியமான மூர்த்திகள், பூசனை முதலியவற்றை வழக்கம்போல செய்வதற்கு, வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யப் பெறுவார். அப்போது அக்கிரியை “வாலஸ்தாபனம்” என்பர். பாலஸ்தாபனம் செய்யப்படும் கோயில், “பாலாலயம்”. தமிழில் “இளங்கோயில்” எனப்படும். திருப்பணி நிறைவேறி, திருக்குட முழுக்கும் செய்தபின், பாலாலயம் அழிக்கப்படுவது வழக்கம். ஆனால் மீயச்சூரில் பாலாலயம் அழிக்கப்படாது, பேணப்பட்டு வருகிறது. (திருவாலங்காட்டில் எழுப்பப்பட்ட பாலாலயம் அளவில் சிறியது). திருமேனிகள் பழைய இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு உள்ளன. ஆனால் சிற்றாலயம் பேணப்பட்டு வருகிறது. இறைவர், இறைவி பாலாலயத்தில் எழுந்தருளி இருக்கும்போது நாவுக்கரசர் தரிசித்து, பதிகம் பாடினர் ஆதலின் பாலாலயம் அழிக்கப்பெறாது, பாதுகாக்கப்பட்டு, தனிக்கோயிலாக இருந்து வருகிறது. பாலாலயம் இருக்கும் இடம்.

பயண வசதிகள் உண்டு. மேலே பெரிய கோயிலுக்குப் போலக் கொள்க.

சோழநாடு, காவிரி தென்கரை : 57