இவர் குறைவில்லாத பெருமையினை உடைய சடையநாயனாரது செல்வம் பொருந்திய
திருமனைவியார். முப்புரங்களை அழித்தவராகிய சிவபெருமான் ஆண்டருளிய நம்பியாரூரரைப்
பெற்றெடுத்தவர். சிவவேதியரது குலத்தில் பிறந்தவர். திருவாரூர்க் கமலாபுரத்தில்
ஞானசிவாசாரியார் குடும்பத்தில் அவதரித்த பெண்கொடியாவார்.
மேலதிக குறிப்புக்கள்
குலம் : ஆதிசைவர்
நாடு : நடுநாடு
ஊர் : திருநாவலூர்
குருபூசை / திருநாள் : சித்திரை – சித்திரை
ஒரே பார்வையில் ...
சடைய நாயனாரின் துணைவியாவர். சுந்தரமூர்த்தி நாயனாரைப் பிள்ளையாகப்
பெற்றெடுத்து, வளர்த்து, உலகம் உய்ய வழங்கிய பெண்மணி ஆவர்.