6. திருவாரூர்ப் பிறந்தார்

பெருக்கிய சிறப்பினையுடைய திருவாரூர்ப் பிறந்தார்கள், திருக்கயிலையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் கணங்களே ஆவார்கள். ஆதலாலே செருக்குடன் எழும் ஐம்பொறிகளையும் அடக்கி, மற்று அவர்களுடைய திருவடிகளை வணங்கி, ஒற்றுமைப் படுத்திய மனத்தை உடையவர்களுக்கே உயர் நெறி அணியாகும்.

சிவகணத்தவர்களே அத்தவத்தினால் திருவாரூரில் வந்து அவதரிக்கப் பெற்றவர்கள். கணத்தவர்களே இவர்கள் ஆதலின் இவர்களது திருவடி வணங்குதல், சிவகணங்களை வணங்கிய பயன் தந்து, உயர் நெறியினை அனுபவிக்கச் செய்யும்.

திருநாள் : பங்குனிக் கடைசி நாள்